யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

264 0

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், 2ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) இடம்பெறுகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு,  12 தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகின்றன.

இதில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தந்து, தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுச் செல்வதை அவதானிக்க கூடியதாக  உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து, தடுப்பூசி மருந்துகளை பெற்று செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.