பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது!

202 0

பயணத் தடை சட்டத்தை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும் அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த 48 பேரையும்  கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, குறித்த தனியார் பேருந்து, இங்கினியாகல நாமல் ஓயா வீதியில் சென்றப்போது, வீதி போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்பேபோது அவர்கள் பயணக்கட்டுப்பாட்டு தடையை மீறி கொழும்புக்கு செல்வதனை அறிந்த பொலிஸார், சாரதி நடத்துனர் உட்பட  48 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த அனைவரையும் அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை இங்கினியாகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.