பருத்தித்துறை சுகாதார பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு மேலும் ஒரு கிராம அலுவலகர் பிரிவு இணைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 ம் திகதி அல்வாய் வடமேற்கு J/397 கிராம அலுவலகர் பிரிவினருக்கும் கொவிட் 19 தடுப்பூசி போடப்படவுள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.