இலங்கையில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!

224 0

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் இதுவரை 15 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு முதலாவது சொட்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எக்ஸ்ட்ரா செனெகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதல் சொட்டு 925,242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 343,805 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் இதுவரை 601,508 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 14,984 பேருக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் சொட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது