வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

249 0

மேல் மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான உத்தரவு பத்திர விநியோக நடவடிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த பத்திரத்தினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று வரை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதனை எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான உத்தரவு பத்திரங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.