கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து வாங்க முயன்று என்ஜினீயர் ரூ.79 ஆயிரத்தை இழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக மர்மநபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆயுஷ் அம்ரித் போர்வால். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.