பயணத்தடை தளர்வு இனி இல்லையா? 7ஆம் திகதி வரை தொடருமா?

221 0

நாட்டில் அமுலாகியிருக்கின்ற பயணத்தடையானது தொடர்ச்சியாக வருகின்ற ஜுன் 07ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேற்று முன்தினம் பயணத்தடை தளர்வுசெய்யப்பட்டபோது, மக்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.

28,31,04ஆம் திகதிகளில் பயணத்தடையை தளர்த்த ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் நாளை வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.