இந்தியாவுக்கான இந்தோனேசிய தூதர் கொரோனாவுக்கு பலி

249 0

இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் பெர்டி நிக்கோ யோகன்னஸ் பியா.

தலைநகர் டெல்லியில் உள்ள இந்தோனேசியா தூதரகத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்காக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி விமானம் மூலம் இந்தோனேசியா அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

இந்த தகவலை இந்தியாவுக்கான இந்தோனேசியா தூதர் சித்தார்த்தோ சூர்யோடிபுரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.