சஜித்தின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

205 0

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுரங்க ரணசிங்க, அனோமா ஹெய்யன்துடுவ, எம்.கே விக்ரமராச்சி, நவோத் சத்சர, பந்துல பெர்ணான்டோ, துஷார சஞ்சீவ, பியுமி ஜயதிலக, டி. பத்மாவதி, திலக் மற்றும் ருவன் ஆகியோர்க்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உள்ளமை அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக்கொண்டதுடன், பி.சி.ஆர் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.