கொவிட் தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்

264 0

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அய்யக்கச்சியில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து குறித்த தொற்றாளர் நெஞ்சுவலி காரணமாக இன்று (26) காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இங்கு சிகிச்சை பெற்றுவந்த தொற்றாளர் மலசலகூட ஜன்னலின் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொவிட் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் நேற்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.