இலங்கையில் மேலும் 2,325 பேருக்கு கொரோனா!!

222 0

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 325 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 72ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 203 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 378 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 271ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 28ஆயிரத்து 578 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 58 ஆயிரத்து 50 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 43ஆயிரத்து 277பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது.

நாட்டில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இறுக்கமான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.