கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று (25) மாலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் காவல்துறையிடம் அறிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.