ஆசிரியர் ராஜகோபாலன் பற்றி வைரலாகும் புதிய தகவல்

355 0

பாலியலுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலன் இடம் பெற்று இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலியல் வழக்கில் சிக்கிய பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அந்த பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த பாலியலுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியிலும் இடம் பெற்று இருந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் பள்ளி சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டியில் ராஜகோபாலன் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
இதனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகிறார்கள். “திருடன் கையில் சாவியை கொடுத்த கதையாக இது உள்ளது” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.