ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

428 0

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 88ஆயிரத்து 39பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஒன்பதாவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 36இலட்சத்து 59ஆயிரத்து 990பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 789பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 66பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 63ஆயிரத்து 151பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 477பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 34இலட்சத்து எட்டாயிரத்து 800பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.