யாழில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான சாலை பொலிசாரால் முற்றுகை.

242 0

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பின் வீதியில் பயணத்தடையின் போது நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக இயங்கி வந்த பிரபல மதுபானசாலை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் இன்று முற்றுகையிடப்பட்டது .

பொலிசாரின் முற்றுகையின் போது மதுபானம் வாங்க தயாராகஇருந்த ஒருவரும் மதுபானசாலை முகாமையாளர்,மற்றும் மதுபானம் விற்பனைசெய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதில் 1/4 போத்தல் 100உம் முழுபோத்தல் 4 பியர் 8உம் கைப்பற்றபட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மதுபான சாலையில் பயணத் தடை விதிக்கப்பட்ட போது மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது