இலங்கையில் நேற்று 2971 கொவிட் தொற்றாளர்கள் ; கொழும்பில் 605

226 0
நேற்று நாடு முழுவதுமிருந்து 2971 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகூடிய எண்ணிக்கையானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.
இதன்படி 605 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.
இதேவேளை கம்பஹாவிலிருந்து 395 பேரும் களுத்துறையிலிருந்து 472 பேரும் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து 223 பேரும் குருநாகலிலிருந்து 171 பேரும் காலியிலிருந்து 168 பேரும் மாத்தறை யிலிருந்து 96 பேரும் நுவரெலியாவிலிருந்து 92 பேரும் மாத்தளையிலிருந்து 88 பேரும் கண்டி மற்றும் பதுளையிலிருந்து தலா 85 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து 82 பேரும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 60 பேரும் கேகாலையிலிருந்து 56 பேரும் திருகோணமலையிலிருந்து 55 பேரும் தொற்றாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.
புத்தளம், அனுராதபுரம், பொலன்நறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கொரோனா நோய்த்தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.