நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

213 0

நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும் சந்திரிகாம தோட்டப் குதியில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இந்த பகுதிகளுக்குள் உள்ளே பிரவேசிக்கவும் வெளியேறவும்  மீள அறிவிக்கும் வரை தடை விதிக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.