மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று!

225 0

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று மட்டும் நாடு முழுவதும் 2,971 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 167,171 ஆக அதிகரித்துள்ளது.

அதில் கொழும்பில் 605 நோயாளிகளும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 472 நோயாளிகளும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 395 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் இரத்தினபுரியில் 223, குருநாகலில் 171, காலியில் 168, மாத்தறையில் 96, நுவரெலியாவில் 92 பேருக்கும் மாத்தளையில் 88, கண்டி மற்றும் பதுளையில் தலா 85, யாழ்ப்பாணத்தில் 82, ஹம்பாந்தோட்டையில் 60, கேகாலையில் 56 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் 55, அனுராதபுரத்தில் 37, மொனராகலை மற்றும் கிளிநொச்சியில் தலா 30 பேருக்கும், அம்பாறையில் 27, புத்தளத்தில் 23, பொலன்னறுவை 24, முல்லைத்தீவு 22, மட்டக்களப்பு 20, வவுனியாவில் 12, மன்னாரில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.