பேலியகொடை மீன் சந்தையினை மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானம்!

593 0

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பேலியகொடை மீன் சந்தையினை மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பேலியகொடை மீன் சந்தை மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பேலியகொடை மீன் சந்தை நாளைய தினம் திறக்கப்படும் என்பதுடன், எதிர்வரும், 29 ஆம் திகதி முதல் தடையின்றி வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.