சுகாதார சேவையாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர், டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சில சுகாதார சேவையாளர்கள் பணம் செலுத்தி வாடகை வாகனங்களில் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளை தெளிவுப்படுத்திய போதிலும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.