இலங்கையில் எவரும் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் ஒருவர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் அவர் அதற்கான மருந்துகளை எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்