யாழில் 3.9 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

285 0

யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமானாறு கடலோரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படை நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின்போது, கடற்கரையில் கைவிடப்பட்ட 131 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைவிட்ட 4 பொதிகளிலிருந்து மேற்படி கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கேரள கஞ்சாவின்  பெறுமதி சுமார் 3.9  கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப, மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை தீயிட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.