அடுத்த வாரத்திலிருந்து தினமும் 7,000 பேருக்கு தடுப்பூசி

282 0

இதுவரை கொழும்பில் 1,67,397 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதென கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த வாரத்திலிருந்து தினமும் 7,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த மாதம் இறுதியில் கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.