கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா

254 0

கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது.

புளியம்பொக்கணையை சேர்ந்த 15 வயது மாணவியொருவர் நேற்றிரவு நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.