வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஆண் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலை யின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, கொரோனாவின் மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற நான்காவது மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.