தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய அமெரிக்கர் கைது

233 0

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொத்துவில், அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய அமெரிக்க நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.