கொத்மலை தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேலும் 26 பேருக்கு கொரோனா

268 0

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) குறித்த தொழிற்சாலையிலுள்ள 90 ஊழியர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த முடிவுகளின் அடிப்படையிலேயே 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 18 பேர் பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் எனவும்  8 பேர் புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அண்மையில் குறித்த தொழிற்சாலையில் பணிப்புரிந்த 82 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியிருந்த 90 பேருக்கே நேற்று பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.