சுன்னாகத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை எடுத்து சென்ற ஒருவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியின் கீழ் செயற்படும் விசேட பொலீஸ் அணிக்கு கிடைத்த ரகசிய தகவல்படி சுன்னாகம் மருதனார்மட பகுதியில் சொகுசுவாகனத்தில் முறைகேடான வித த்தில் கடத்தி வரப்பட்ட சாராயபோத்தல் 240 பொலீசாரினால் மீட்கப்பட்டதோடு முறைகேடாக கடத்திவரப்பட்ட பொருட்களை கடத்திவந்த ஒருவரையும் வாகனத்தையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர் மற்றும் கைது செய்யப்பட்ட பொருட்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேல திக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.