சஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் கைது

273 0

சஹ்ரான் ஹசீமின் அடிப்படைவாத வகுப்புகளை நடத்தவும் அவற்றை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கேகாலை மாவனெல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெம்மாத்தகம பிரதான வீதியில் வசித்து வந்த 29 வயதான மொஹமட் சஹீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், 2018 ஆம் ஆண்டு மூதூர், மாவனெல்லை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் அடிப்படைவாத வகுப்புகளை நடத்தியதாக கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.