கிரான்பாஸ், 233 ஆவது தோட்டம் தனிமைப்படுத்தலுக்கு…

292 0

கிரான்பாஸ், மஹவத்த வீதியின் 233 ஆவது தோட்டமும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இராணுவத் தளபதிஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (20) காலை முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.