மன்னார் கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட குழு

237 0

மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.பிரதீப், மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கே.திலீபன் உட்பட வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து செயற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளனர்.

தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையினால் கூடுதலான பெண்கள் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக இயங்க குறித்த கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையம் இயங்க உள்ளது.

ஒரே நேரத்தில் நூறு நபர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று முதல் மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்தில் பெண் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery