கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 892 ஆக உயர்வு!

349 0

நாட்டில் நேற்றைய நாளில் 24 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 892 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்களினதும், 10 பெண்களினதும் மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளன.

அவர்களில் 18 பேர் கொவிட் நியூமோனியாவினால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.