ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

283 0

சகோதரரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த நிலையில் மரணம் அடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
ஓ பன்னீர்செல்வம்

ஓ.பாலமுருகனை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.