மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!

264 0

சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல – கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

மேற்படி, தோட்டப் பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.

மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.