பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்டது-அஜித் ரோஹண

230 0

அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைமுயும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.