பயணக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிடின் கொவிட் தொற்று தீவிரமடையும்

263 0

தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிடின் கொவிட் 19 பரவல் தொடர்ந்தும் அதிகரிக்கும் என தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தொற்று நோய் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்களே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் பயணக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிடின் இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.