பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்

282 0

பிலியந்தலை பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த சந்தையில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் பதிவானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தையில் உள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 101 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 07 ஆம் திகதி 269 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பிலியந்தலை பொது சந்தை தொகுதியை இன்று (09) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிததுள்ளது.