WHOவின் பதில் இலங்கை பிரதிநிதி – சஜித் இடையிலான விசேட கலந்துரையாடல்

339 0

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் இலங்கை பிரதிநிதி மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 பரவலானது இலங்கைக்கு சவாலாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொவிட்-19 நிலைமையானது தொடர்ந்தும் சவால் மிக்கதாக மாறி வருகின்றது.

அவரச சிகிச்சை பிரிவுகளில் கட்டில்களுக்கும் பிராணவாயு செறிவூட்டிகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பதில் இலங்கை பிரதிநிதி, குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.