வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தொலைபேசிகளை திருடிய கும்பல்

245 0

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட 6 பேரை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் உலகில் பொருட்களை எடுத்துச் செல்லும் பிரதான நிறுவனங்களை சேர்ந்த மூன்று பேர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருக்கும் ஒருவர், இலங்கையில் உள்ள ஒருவருக்கு அனுப்பி வைத்த எப்பல் தொலைபேசி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த பின்னர் காணாமல் போன சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசி உலகில் உள்ள பிரதான குரியர் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட 19 தொலைபேசிகளை சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளில் 16 தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.