நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் வெள்ளப்பெருக்கு

277 0

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நில்வளா மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் பானதுகம பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களு கங்கையின் கிளை ஆறான மகுர கங்கையின் நீர் மட்டமும் மகுர பகுதியில் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.