அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை ,கூரை மீதேறிய கைதிகள்

223 0

கோரிக்கைகள் சிலவற்றை  முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், இன்று சிறைச்சாலை கூரையின் மீ​தேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சிறைச்சாலையில்  கைதிகளுக்கு முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனையின் அறிக்கை கிடைக்கும் வரை, அவர்களை தனியாக தடுத்து வைக்குமாறும் விரைவாக பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரியே,இக்கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கை​யை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.