கணவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதால் மனைவியும் தற்கொலை

231 0
கணவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதால் மனைவியும் அதே வழியில் தனது உயிரை மாய்த்துகொண்ட  சம்பவம்  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த  பரமலிங்கம் பகீரதன் (34), ரஜிதா (33) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை இடம்பெற்றது.