தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது

246 0

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், இதுவரையான காலப்பகுதியில் 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 657 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 114 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.