தற்கொலை முயற்சி குறித்த செய்தியில் உண்மையில்லை – ரஞ்சன் ராமநாயக்க தரப்பு

239 0

தற்கொலை முயற்சி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்தியில் உண்மையில்லை என ரஞ்சன் தரப்பு தெரிவித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின் அட்மின் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உச்ச நீதிமன்றம் நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரஞ்சன் தற்பொழுது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்படடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.