வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது

245 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறந்துரைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து நேற்று இரவு குறித்த வியாபாரியை பின் தொடர்ந்த வேளையில் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வியாபாரி நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.