திருமலையில் 56 பேருக்கு கொரோனா

235 0

திருகோணமலை நகரத்தின் புறநகர் பகுதியான பூம்புகார் பகுதியில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த இரு நாட்களில் மட்டும் அப்பகுதியில் 56 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். திருகோணமலை நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியில் அதிளவானோர் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களே.

இதனால் திருகோணமலை நகரில் தொற்று அபாயம் அதிகரிக்கும் அச்ச சூழல் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.

இதனிடையே, பூம்புகார் கிராமம் நேற்றிரவு 8 மணி முதல் முடக்கப்பட்டதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளளமையும் குறிப்பிடத்தக்கது