அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த முடிவு

267 0

அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.