அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு

225 0

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை செலுத்துவதற்கு தேவையான 350,000 தடுப்பூசிகள்  கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.