யாழில் சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்துவந்த மூவர் கைது

242 0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசங்களில் நெடுங்காலமாக ஹெரோயின்,கஞ்சா போன்ற சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்துவந்த பிரதான சூத்திரதாரியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு குருநகர் பகுதியை சேர்ந்தவர்களெனவும், கடல் வழியாக போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்.குடா நாட்டிற்கு கஞ்சா பொருட்களை கடத்தி வந்த குழுக்களின் தலைவர் உட்பட மூவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கடத்தல் காரர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ஹெரோயின் போதைப பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான, உப பொலிஸ் பரிசோதகர் மேனன் அணியினரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.