வவுனியா – தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

274 0

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.